Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிறுவாணி சப்ளை அதிகரிப்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம்

Print PDF

தினகரன் 18.06.2010

சிறுவாணி சப்ளை அதிகரிப்பு ஒருநாள் விட்டு ஒருநாள் குடிநீர் வினியோகம்

கோவை, ஜூன் 18: சிறுவாணி குடிநீர் அளவு மேலும் 50 லட்சம் லிட்டர் அதிகரிக்கப்பட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்கப்படும் என மாநகராட்சி அறிவித்தது.

கோவை சிறுவாணி அணையில் தொடர் மழை நீடிக்கிறது. கடந்த 12ம் தேதியிலிருந்து தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக, நீர் மட்டம் 869. 15 மீட்டராக உயர்ந்தது.

அதாவது 6 நாளில், நீர் மட்டம் 3 மீட்டர் வரை உயர் ந்து. மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதால் நீர் மட் டம் மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுவாணி நீர் மட்டம் உயர்ந்து வருவதால் குடிநீர் அளவு அதிகரிக்கப்பட்டது. இதுவரை தினமும் 5.6 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. நேற்று முன் தினம் வரை 7 கோடி லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டது. நேற்று மேலும் கூடுதலாக 50 லட்சம் லிட்டர் குடிநீர் அதிகரிக்கப்பட்டது. மேலும் குடி நீர் விநியோகத்தை அதிகரிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அணையிலிருந்து தினமும் 9 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. வழியோர கிராமங்களுக்கு 1.5 கோடி லிட்டர் குடிநீர் தினமும் வழங்கப்படுகிறது.

கோவை மாநகர் பகுதிக ளுக்கு 4 நாளுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடிநீர் வழங்க மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா உத்தரவிட்டார்.

இதன்படி வழக்கமான குடிநீர் திட்டம் நடைமுறை க்கு வந்தது. குடிநீர் அளவு இனி எந்த பகுதியிலும் குறைக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. பில்லூர் குடிநீர் விநியோகத்திற்குட்பட்ட சில பகுதியில் சிறுவாணி குடிநீரை மாற்றி விநியோகித்து வந்தனர். பில்லூர், சிறுவாணி அணை நீர் வரத்து சீராக இருப்பதால், குடிநீரை மாற்றி விநியோகிப்பது நிறுத்தப்பட்டது. முறையான குடிநீர் விநியோகம் நடக்கிறது.

இதுவரை தனி நபர் குடி நீர் அளவு 70 லிட்டர் ஆக இருந்தது. தற்போது தனிநபர் குடிநீர் அளவு 130 லிட்டராக அதிகரிக்கப்பட்டது.