தினகரன் 18.06.2010
பாளை கேடிசி நகரில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த நடவடிக்கை
பாளை வி.எம்.சத்திரம், கே.டி.சி நகர் பகுதி வீடுகளில் குடிநீர் இணைப்பை முறைப்படுத்த கோரி மாநகராட்சி அதிகாரிகள் வீடு, வீடாக நோட்டீஸ் வழங்கினர்.
நெல்லை, ஜூன் 18: பாளை கேடிசி நகரில் அனுமதியற்ற குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த அதிகாரிகள் நேற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட கேடிசி நகர் மற் றும் வி.எம்.சத்திரம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான அனுமதியற்ற குடிநீர் இணைப்புகள் இருந்தன. கடந்த ஓராண்டுக்கு முன்பு மாநகராட்சியால் இவை கண்டறியப்பட்டு இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. மீண்டும் தங்களுக்கு குடிநீர் இணைப்பு முறைப்படி வழங்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதன் அடிப்படையில் மாநகராட்சி, நகராட்சி மற் றும் பேரூராட்சிகளில் அனுமதியற்ற வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இருமடங்கு வைப்புத்தொகை வசூலித்து அவற்றை முறைப்படுத்த அரசு உத்தரவிட்டது. இதன் பேரில், நெல்லை மாநகராட்சியில் குடிநீர் விநி யோகம் துண்டிக்கப்பட்ட நபர்கள் கூடுதல் வைப்புத் தொகை செலுத்தி மீண்டும் இணைப்புகளை பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கேடிசி நகர், வி.எம்.சத்திரம் ஆகிய பகுதிகளில் இரு நாட்கள் நடந்த சிறப்பு முகாம்களில் 68 பேர் உரிய தொகையை செலுத்தி இணைப்பு பெற்ற னர். மீதமுள்ள 166 பேர் முறையான இணைப்பு பெறக்கோரி நேற்று மாநகராட்சி அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து, வீடு,வீடாக கட்ட வேண்டிய தொகை குறித்த நோட்டீஸ்களை அளித்தனர்.
உதவி செயற்பொறியாளர்கள் சாந்தி, சாமுவேல் செல்வராஜ், கருப்பசாமி, ஏ.ஆர்.ஓ. வெங்கட்ராமன், இளநிலை பொறியாளர் பைஜூ ஆகியோர் தலைமை யில் இக்குழுக்கள் ரகுமத்நகர், கேடிசி நகர், அப்துல்ரகுமான் நகர், வி.எம்.சத்திரம் ஆகிய இடங்களில் குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்த கேட்டு கொண்டது.
பொதுமக்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குடிநீர் இணைப்புகளை முறைப்படுத்தி கொள்ள லாம். இதை தவறவிடும் பட்சத்தில், அனுமதியில்லாத இணைப்பு பெற்றவர்கள் சட்ட நடவடிக்கைகளை சந்திக்க நேரிடும் என மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
10 குழுக்கள் அமைப்பு