தினமலர் 21.06.2010
சிவகாசியில் தினமும் குடிநீர் சப்ளைக்கு ஏற்பாடு
சிவகாசி : சிவகாசியில் தினமும் குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சிவகாசி நகராட்சி துணைத்தலைவர் அசோகன், கமிஷனர் (பொறுப்பு) முருகன் மற்றும் கவுன்சிலர்கள் வெம்பக்கோட்டை அணை பகுதியில் உள்ள குடிநீர் வழங்கும் நீர் ஆதாரங்களை ஆய்வு செய்தனர். மழை காலம் துவங்கும் வரை சிவகாசியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் முன் ஏற்பாடு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். இதனால் நான்கு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. மேலும் சிவகாசி, விருதுநகர் நகராட்சிகளுக்காக புதிதாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு மதிப்பீடு செய்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இத் திட்டமும் நடைமுறைக்கு வந்தால் சிவகாசியில் தினமும் குடிநீர் வினியோகம் இருக்கும் என நகராட்சி துணை தலைவர் தெரிவித்தார்.