தினமணி 22.06.2010
குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க உடனடி நடவடிக்கை
திருநெல்வேலி
, ஜூன் 21: திருநெல்வேலி மாநகர் பகுதியில் நிலவிவரும் குடிநீர்த் தட்டுப்பாட்டை தீர்க்க மாநகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.திருநெல்வேலி மாநகராட்சியின் சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் மேயர் அ
.லெ. சுப்பிரமணியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.துணை மேயர் கா
. முத்துராமலிங்கம், ஆணையர் டாக்டர் சுப்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில்
, உறுப்பினர்கள் பேசியது:சைபுன்னிசா
(திமுக): எனது 37-வது வார்டில் முறையான குடிநீர் விநியோகம் இல்லை. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.குடிநீர்ப்க் தட்டுப்பாட்டை கண்டித்து அடிக்கடி மறியல் போராட்டமும் நடத்தி வருகின்றனர்
.இதுகுறித்து நான் அதிகாரிகளிடம் பலமுறை பேசியும் இதுவரை நடவடிக்கை இல்லை
.உறுப்பினர் ஆ
. துரை (திமுக): எனது வார்டில் நீண்ட காலமாக குடிநீர் பிரச்னை இருந்து வருகிறது.திம்மராஜபுரம் பகுதியில் இரண்டு தெருக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய ஒரு வால்வை அமைத்தால் போதும்
. அதைக்கூட செய்ய காலதாமதம் செய்கின்றனர்.தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்துகொண்டு குடிநீருக்காக வாடுவது வருத்தம் அளிக்கிறது
.கோடை காலத்தில் தண்ணீர்த் தட்டுப்பாட்டை போக்க ஒரு வார்டுக்கு
2 சிறிய குடிநீர்த் தொட்டிகளை அமைக்கவும், ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டது.ஆனால்
, அந்தப் பணிகளை குத்தகை எடுக்க ஒப்பந்தக்காரர்கள் எவரும் முன்வரவில்லை. ஒவ்வொரு தொட்டிக்கும் ரூ. 75 ஆயிரம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.அந்த தொகை போதாது என ஒப்பந்தக்காரர்கள் கூறுகின்றனர்
. எனவே, சரியான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தொகை ஒதுக்கீடு செய்ய வேண்டும்.அனுமதி இல்லாத குடிநீர் இணைப்புகள் அகற்றப்பட வேண்டும்
. அதைக் கண்காணிக்க ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.அனுமதி இல்லாத இணைப்புகளை கொடுப்பதற்கு சில அதிகாரிகளும்
, மாமன்ற உறுப்பினர்களும் துணை போவதை தவிர்க்க வேண்டும்.சிறிய மேல்நிலை குடிநீர்த் தொட்டி அமைக்க குறைவான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உறுப்பினர்
அப்துல் வகாப்பும் வலியுறுத்தினார்
.உறுப்பினர் பேபி கோபால்
: கோடை காலத்தில் தண்ணீர் பிரச்னையை தீர்க்க வார்டுகளில் சிறிய மேல்நிலை குடிநீர்த் தொட்டியை அமைக்கும் பணியை குத்தகை எடுக்க எவரும் முன்வராததால் ஒவ்வொரு வார்டுக்கும் பிரித்து அந்தப் பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோர வேண்டும்.வ
.உ.சி. மைதானத்தில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கு மாநகராட்சி ஒப்புதல் அளிக்க வேண்டும்.மேயர்
: வ.உ.சி. மைதானத்தில் நடைபாதை அமைக்கும் திட்டத்திற்கு ஆட்சேபம் எதுவும் இல்லை. அந்த திட்டத்திற்கு முறையான அனுமதி கோரி இதுவரை பொதுப் பணித் துறையில் இருந்து கடிதம் வரவில்லை. கடிதம் வந்தால் அதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கப்படும் என்றார்.உறுப்பினர் சுப
. சீதாராமன்: அந்த திட்டத்திற்கு அனுமதி கோரி பொதுப் பணித் துறையில் இருந்து வரைபடத்துடன் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதை பரிசீலித்து அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில்
, புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆணையர் சுப்பையனுக்கு மேயர், மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், விஸ்வநாதன், எஸ்.எஸ். மைதீன். பூ. சுப்பிரமணியன் மற்றும் உறுப்பினர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.