Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும் பணி

Print PDF

தினமணி 28.06.2010

வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும் பணி

வந்தவாசி, ஜூன் 28: வந்தவாசி நகருக்கு குடிநீர் வழங்க ரூ.10 லட்சத்தில் புதிய கிணறு அமைக்கும்பணி செய்யாறு ஆற்றில் நடந்து வருகிறது. இதனை ஆணையாளார் (பொறுப்பு) .மகாதேவன் நேரில் ஆய்வு செய்தார்.

வந்தவாசி நகராட்சியில் 24 வார்டுகள் உள்ளன. இதில் 3,500 க்கும் அதிகமான குடிநீர்குழாய் இணைப்புகள் உள்ளன. மூன்று நாட்களுக்கு ஒரு முறை நகர மக்களுக்கு குடிநீர்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

வந்தவாசி நகருக்கு 18 கிலோ மீட்டர்தூரமுள்ள செய்யாற்றில் இருந்து பைப் லைன் மூலம் குடிநீ£¢ கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் வரை குடிநீர் சீரானமுறையில் விநியோகித்து வந்தனார்ஆனால் செய்யாறு ஆற்றில் இருக்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள நான்கு கிணறுகளிலும் குடிநீர் ஆதாரம் குறைந்ததால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்ட குடிநீர், தற்போது 6 நாட்களுக்கு ஒருமுறை அதுவும் குறைந்த நேரம் மட்டுமே வழங்கப்படுகிறது.

குடிநீர்தட்டுப்பாட்டை போக்க வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்தில் 5வதாக புதிய கிணறு அமைக்கும் பணி செய்யாறு ஆற்றில் நடந்து வருகிறது. இப்பணியை ஆணையாளார்(பொறுப்பு) .மகாதேவன் நேற்று பார்வையிட்டு பணியை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு உத்தரவிட்டார்.