Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

Print PDF

தினமணி 21.07.2010

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் அதிகரிப்பு

சென்னை, ஜூலை 20: சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 4 நாள்களாக மழை பெய்துள்ளதையடுத்து, நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால், முக்கிய ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

பூண்டி- நீர்மட்டம் 131.58 அடி, நீர் வரத்து 107 மி.. அடி, மழையளவு 5 மி.மீ.; சோழவரம்- நீர்மட்டம் 49.21 அடி, நீர் வரத்து 68 மி.. அடி, மழையளவு 4 மி.மீ.; புழல்- நீர்மட்டம் 40.38 அடி, நீர் வரத்து 72 மி.. அடி, மழையளவு 4 மி.மீ.;

செம்பரம்பாக்கம்- நீர்மட்டம் 77.51 அடி, மழையளவு 3 மி.மீ. இந்த ஏரிகளில் கடந்த ஆண்டு இதே நாளில் மொத்த நீர் இருப்பு 4,072 மி.. அடியாக இருந்தது. தற்போது இந்த அணைகளின் மொத்த நீóர் இருப்பு 4,397 மி.. அடியாக உயர்ந்துள்ளது.