தினகரன் 26.07.2010
குடிநீர் திட்ட துவக்க விழா
மார்த்தாண்டம், ஜூலை 26: குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மார்க்கெட் சாலையில் குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் சிறுமின்விசை பம்பு ரூ.1 லட்சம் செலவில் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது.
நகராட்சி தலைவர் பொன். ஆசைதம்பி தலைமை வகித்து குடிநீர் சப்ளையை தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் குரல்செல்வி, ஜெயன், கவுன்சிலர் பொன்.சகாதேவன், பிரவின்ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.