Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெள்ளகோவிலில் குடிநீர் சப்ளை பாதிப்பு

Print PDF

தினகரன் 27.07.2010

வெள்ளகோவிலில் குடிநீர் சப்ளை பாதிப்பு

திருப்பூர், ஜூலை 27: வெள்ளகோவில் நகரமன்ற தலைவர் சாந்திகந்தசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:

வெள்ளகோவில் நகராட்சி பகுதிகளுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கொடுமுடி தலைமை நீரேற்று நிலையத்தில் மின்மோட்டார் பழுது காரணமாக குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் மோட்டார் தமிழ்நாடு குடிநீர் வாரியம் மூலமாக பழுது சரி செய்யப்பட்டு மீண்டும் குடிநீர் கிடைக்கும் வரை பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக் கொள்கிறேன். இதர பயன்பாடுகளுக்கு நகராட்சி நிர்வாகத்தால் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறு மின்விசைப்பம்பு டேங்க் மூலம் வழங்கப்படும் தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.