மாலை மலர் 27.07.2010
40
வருடங்களுக்கு பிறகு 750 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு; மேயர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்சென்னை
, ஜூலை. 27- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கோட்டூர்புரம் பாரதி அவென்யூ, மாந்தோப்பு காலனி பகுதியில் 750 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த பகுதி குடியிருப்புகள் உருவாகி
40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை வசதிகள் செய்து தரப்படவில்லை. தனியார் ஒருவரால் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதால் குடிநீர் இணைப்புகள் வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.தற்போது வழக்குகள் முடிந்து மாநகராட்சி சார்பில் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது
. ரூ.34 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கழிவு நீரோற்று நிலையத்தை மேயர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.அத்துடன்
, மாந்தோப்பு காலனியில் உள்ள 112 குடிசை வீடுகளுக்கும் இலவசமாக கழிவுநீர் இணைப்பு வழங்கவும் உத்தரவிட்டார்.இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்
.எல்.ஏ. சைதை கிட்டு, கோட்டூர் சண்முகம், அன்பு, கவுன்சிலர் மேரி லூர்துசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். குடிநீர் இணைப்பு வழங்கியதற்காக குடியிருப்போர் நல சங்கங்கள் சார்பில் மேயருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.