தினமணி 28.07.2010
மார்த்தாண்டத்தில் குடிநீர்த் தொட்டி திறப்பு
மார்த்தாண்டம், ஜூலை 27: மார்த்தாண்டத்தில் குழித்துறை நகராட்சி சார்பில் சிறுமின்விசை குடிநீர்த் தொட்டி திறப்புவிழா நடைபெற்றது.
குழித்துறை நகராட்சியின் 21-வது வார்டு சந்தை சாலையில் உள்ள கிணற்றில் ரூ. 75 ஆயிரம் மதிப்பில் சிறுமின் விசை குடிநீர்த் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்ச்சிக்கு நகர்மன்றத் தலைவர் பொன்.ஆசைத்தம்பி தலைமை வகித்து குடிநீர்த் தொட்டியை திறந்து வைத்தார். வார்டு உறுப்பினர் பொன்.சகாதேவன், ஜயன், பிரபின்ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.