Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆக.7ல் துணை முதல்வர் அறிவிப்பார் சங்கரன்கோவில் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய திட்டம்

Print PDF

தினகரன் 02.08.2010.

ஆக.7ல் துணை முதல்வர் அறிவிப்பார் சங்கரன்கோவில் குடிநீர் பிரச்னை தீர்க்க புதிய திட்டம்

சங்கரன்கோவில், ஆக. 2: சங் கரன்கோவில் குடிநீர் பிரச் னையை தீர்க்க வரும் 7ம் தேதி நடைபெறும் விழாவில் துணை முதல்வர் மு..ஸ்டா லின் அறிவிப்பு வெளியிடுவார் என கருப்பசாமிபாண்டியன் எம்எல்ஏ தெரிவித்தார்.

நெல்லை மாவட்டத்தில் வரும் 6, 7ம் தேதிகளில் துணை முதல்வர் மு..ஸ்டா லின் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார். சங்கரன்கோவிலில் 7ம் தேதி நடைபெறும் விழாவில் புதிய தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைக் கிறார். இதற்காக அங்கு பிர மாண்ட பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளை மாவட்ட திமுக செயலாளர் கருப்பசாமிபாண்டியன் நேற்று பார்வையிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் வருகிற 7ம் தேதி சங்கரன்கோவில் யூனியன் அரிநாயகிபுரம் பஞ்சாயத் தில் ரூ.2.5 கோடியில் கட்டப்பட்டுள்ள சமத்துவபுரத்தையும், அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலை யையும் திறந்து வைக்கிறார். பின்னர் சங்கரன்கோவிலில் நடைபெறும் அரசு விழா வில் ரூ.1.68 கோடியில் புதி தாக கட்டப்பட்ட தாலுகா அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து 2 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி களை வழங்குகிறார்.

நெல்லை மாவட்டத்தில் அம்பை, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய இடங்களில் 2 நாள் நடை பெறும் விழாவில் துணை முதல்வர் பங்கேற்கிறார். அம்பையில் புதிய தாலுகா அலுவலக கட்டிடம், குலவணிகர்புரத்தில் மாநில அரசு, மத்திய ரயில்வேதுறை இணைந்து ரூ.25.5 கோடியில் அமைய இருக்கும் மேம்பா லம், ரூ. 4 கோடியில் உருவாக இருக்கும் மணிமுத்தாறு, வி.கே.புரம் கூட்டு குடிநீர் திட்டம், ரூ.28.30 லட்சத்தில் கடையநல்லூர் கூட்டு குடி நீர் திட்டம், செங்கோட்டை யில் வாஞ்சிநாதன் நினைவு மணிமண்டபம், கல்லிடைக்குறிச்சியில் ரூ.8 லட்சத்தில் சமுதாய நலக்கூடம் ஆகிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். கல்லிடைகுறிச்சி யில் ரூ.27 லட்சத்தில் புதி தாக கட்டப்பட்ட பஸ் நிலைய கட்டிடங்கள் மற்றும் வண்ணார்பேட்டையில் கட்டப்பட்ட மேம்பாலங் களை திறந்து வைக்கிறார்.

சங்கரன்கோவில் நக ராட்சி பகுதியில் நிலவும் குடி நீர் பிரச்சினை குறித்து சேர் மன், உள்ளாட்சி பிரதிநிதி கள், எம்.பி, நான் அனை வரும் துணை முதல்வரிடம் தெரிவித்து இருக்கிறோம். இங்கு நடைபெறும் விழா வில் துணை முதல்வர் மகிழ்ச்சியான செய்தியை மக்களுக்கு அறிவிப்பார்.இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் ராசாத்தலைவர், யூனியன் சேர்மன் அன்புமணி கணேசன், துணைச் சேர்மன்கள் லாலா சங்கரபாண்டியன், சங்கரன், நகரச் செயலாளர் பரமபால்பாண்டியன், ஒன்றியச் செயலாளர்கள் துரைராஜ், கடற் கரை, பஞ்சாயத்து தலைவர் முத்துப்பாண்டியன், பொரு ளாளர் மாரியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.