Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர் கன மழையால் மேலும் ஒரு ஏரி நிரம்பியது

Print PDF

தினகரன் 05.08.2010

தொடர் கன மழையால் மேலும் ஒரு ஏரி நிரம்பியது

மும்பை, ஆக. 5: கடந்த சில நாட்களாக பெய்து வரும் கன மழையால் மும்பைக்கு குடிநீர் சப்ளை செய்யும் மேலும் ஒரு ஏரி நேற்று நிரம்பி வழிந்தது. மற்ற ஏரிகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. ஜூலை 21ம் தேதி 6 ஏரிகளில் மொத்தம் 2,91,183 மில்லியன் லிட்டர் நீர் இருந்தது. இது தற்போது 9,00,718 மில்லியன் லிட்ட ராக அதிகரித்துள்ளது. 13 நாட்களில் 6,09,535 மில்லியன் லிட்டர் நீர் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் 6 ஏரிகளி லும் மொத்தம் 7,22,781 மில்லியன் லிட்டர் நீர் இருந்தது.

மும்பை மாநகராட்சி யிடம் உள்ள தகவலின்படி, மொடக் சாகர் ஏரியில் 90.40 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. தான்சாவில் 42.40, விஹார் ஏரியில் 37.80, துள்சியில் 57, அப்பர் வைதர்னாவில் 91 மற்றும் பாட்சாவில் 62 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி முதல், துள்சி மற்றும் மொடக் சாகர் ஏரிகள் நிரம்பி வழிகின்றன. தான்சா ஏரி நேற்று நிரம்பி வழிந்தது. விஹார் நிரம்பி வழிய இன் னும் 1.5 மீட்டரே பாக்கி உள்ளது. அப்பர் வைதர்னா வில் 3.5 மீட்ட ரும் பாட்சா வில் 10 மீட்ட ரும் பாக்கி இருக்கின்றன.