Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உளுந்தூர்பேட்டையில் இன்று குடிநீர் தொட்டி திறப்பு

Print PDF

தினமணி 10.08.2010

உளுந்தூர்பேட்டையில் இன்று குடிநீர் தொட்டி திறப்பு

உளுந்தூர்பேட்டை, ஆக. 9: உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கிறார்.

உளுந்தூர்பேட்டையில் பேரூராட்சி மன்ற வளாகம் மற்றும் அன்னை தெரசா நகரில் ரூ.2.23 கோடி மதிப்பீட்டில் தலா ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.

÷இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை அமைச்சர் க.பொன்முடி திறந்துவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

÷விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் இரா.பழனிச்சாமி தலைமை வகிக்கிறார். விழா ஏற்பாடுகளை பேரூராட்சி மன்றத் தலைவர் வெ.இராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் இந்திரா மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர்.