தினமணி 12.08.2010
தனி குடிநீர் திட்டம் தொடங்கியது
மேட்டூர், ஆக. 11: சேலம் மாநகராட்சி மக்களுக்கான தனி குடிநீர் திட்டம் புதன்கிழமை தொடங்கப்பட்டது.
÷சேலம் மாநகராட்சி மக்களுக்கென்று மேட்டூரில் இருந்து தண்ணீர் விநியோகம் செய்யும் தனி குடிநீர் திட்டம் ரூ.283 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த நிலையில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா மேட்டூர் அருகேயுள்ள தொட்டில்பட்டியில் நடைபெற்றது.
÷வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு தனி குடிநீர் திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட ஆட்சியர் சந்திரகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. கோபால், பி.என்.பட்டி பேரூராட்சித் தலைவர் மயில்சாமி, மேட்டூர் நகராட்சித் தலைவர் சாந்தி, துணைத் தலைவர் காசி விஸ்வநாதன், கோட்டாட்சியர் வேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.