Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்த் திட்டம்: முதல்வருக்கு அமைச்சர் நன்றி

Print PDF

தினமணி 18.08.2010

சிங்கம்புணரிக்கு காவிரி குடிநீர்த் திட்டம்: முதல்வருக்கு அமைச்சர் நன்றி

திருப்பத்தூர்,ஆக. 17: சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி பேரூராட்சிக்கு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு, முதல்வர் அனுமதித்து உத்தரவிட்டுள்ளதற்கு அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் நன்றி தெரிவித்துள்ளார்.

சிங்கம்புணரியிலும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை ஏற்படுத்துமாறு முதல்வரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை பரிசீலித்த முதல்வர், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 5 கூட்டுக் குடிநீர்த் திட்டங்களில், சிங்கம்புணரி பேரூராட்சிக்கான குடிநீர்த் திட்டத்துக்கும் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.

எனவே, | 784 கோடி மதிப்பிலான இத்திட்டத்தில், தற்போது சிங்கம்புணரியும் பலனடையும். இதன்மூலம், இப்பகுதியின் நீண்ட காலக் குடிநீர் பற்றாக்குறை முழுமையாக தீரும். மேலும், திருப்பத்தூர் தொகுதியில், நெற்குப்பை திருப்பத்தூர் பேரூராட்சிக்களுக்கு கடந்த ஆண்டிலேயே காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது, சிங்கம்புணரிக்கு இத்திட்டத்துக்கு அனுமதியளித்த முதல்வருக்கு பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர்.