தினமலர் 20.08.2010
குடிநீர் தேக்க தொட்டி திறப்பு
சோழவந்தான்
:சோழவந்தான் பேரூராட்சி 11 வது வார்டில், மின்இணைப்பு குடிநீர் தேக்கதொட்டி திறப்புவிழா நடந்தது. பேரூராட்சி நிர்வாக அதிகாரி ரா.ராஜா தலைமை வகித்தார். துணைதலைவர் அ.அண்ணாத்துரை, முன்னிலை வகித்தார். பேரூராட்சி பணியாளர்கள் சங்க மாநிலத்தலைவர் ரா.பிச்சைமுத்து வரவேற் றார். கவுன்சிலர் ராஜசேகரன் துவக்கினார். தலைவர் ரா.கலாவதி மின்குடிநீர் இணைப்பை துவக்கிவைத்தார். கவுன்சிலர்கள் கே.ஜெயராம், எஸ்.வீரமாரிபாண்டி, பா.பாலமுருகன் மற்றும் பலர் பங்கேற்றனர். முன்னாள் தலைவர் வெ. அய்யப்பன் நன்றி கூறினார்.