தினமலர் 20.08.2010
தேனியில் குடிநீர் இணைப்பு பெற புதிய கட்டுப்பாடு
தேனி
: தேனியில் குடிநீர் இணைப்பு பெறுபவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.இது குறித்து நகராட்சி கமிஷனர் மோனி கூறியதாவது
: தேனியில் சொத்துவரி செலுத்துபவர்கள், குடிநீர் இணைப்பு பெற உள்ளவர்கள், பெயர் மாற்றம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட் டுள்ளது. இதற்காக விண்ணப்பம் செய்பவர்கள் பாதாள சாக் கடை பங்கீட்டு தொகை செலுத்தியிருக்கவேண் டும். பாகப்பிரிவினை, உயில், பத்திரம் என்றால் வில்லங்கசான்று இணைத்திருக்கவேண் டும். இறந்தவர் சொத்து பெயர் மாற்றம் என்றால் வாரிசு சான்று இணைத்திருக்க வேண் டும்.குடிநீர் இணைப்புகள் இருந்தால் தவறாமல் கட்டணம் செலுத்தியிருக்க வேண்டும்
. குடிநீர் இணைப்பு டெபாஸிட் கூடுதல் தொகையினையும் செலுத்திருக்க வேண்டும். இந்த விதிகளை பூர்த்தி செய்பவர்களிடம் மட்டுமே சொத்துவரி வசூலிக்கப்பட்டு, குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும். பெயர் மாற்றம் செய்யப்படும் என்றார்.