தினமணி 27.08.2010
இடலாக்குடி குளத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி
நாகர்கோவில், ஆக.26: நாகர்கோவில் நகராட்சி 19-வது வார்டுக்கு உள்பட்ட இடலாக்குடி குளத்தூரில் ஆழ்குழாய் அமைக்கும் பணி புதன்கிழமை நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு, நகர்மன்ற உறுப்பினர் பியாஸô ஹாஜிபாபு தலைமை வகித்தார்.
சதாவதானி பாவலர் நற்பணி மன்றத் தலைவர் சித்திக் தொடங்கி வைத்தார். ஹாஜிபாபு, லியாகத்அலி, ஆசிரியர் பாலன், தலைமையாசிரியர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.