Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோதண்டபாணிபுரத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் அமைச்சர் பொன்முடி தகவல்

Print PDF

தினகரன் 31.08.2010

கோதண்டபாணிபுரத்தில் சீரான முறையில் குடிநீர் விநியோகம் அமைச்சர் பொன்முடி தகவல்

திருக்கோவிலூர், ஆக. 31: திருக்கோவிலூர் அருகே அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குட்பட்ட கோதண்டபாணிபுரத்தில் கட்டிமுடிக்கப்பட்டும் பொதுமக்களுக்கு பயன்படாத நிலையில் இருந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு செய்தார்.

பின்னர் அமைச்சர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது, அரகண்டநல்லூர் பேரூராட்சிக்குபட்ட கோதண்டபாணிபுரத்தில் அமைக்கப்பட்ட மேல்நிலை குடிநீர் தொட்டி யில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று ஒரு நாளேட் டில் செய்தி வெளி யாகி உள்ளது. இதுகுறித்து ஆய்வு மேற்கொள்ள முதல்வர் உத்தரவிட்டார். அதன்படி இங்கு அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி ஆய்வு செய்யப்பட்டது. கடந்த ஆட்சியில் தான் இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு இந்த குடிநீர் தொட்டியை துணை முதல்வர் திறந்து வைத்தார். அப்போது வடிவமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரண மாக தான் இந்த மேல்நிலை தொட்டியில் தண்ணீ ஏற்றமுடியாமல் போனது.

ஆனால் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் எந்த தாமதமோ சிரமமோ இல்லை. சீரான முறையில் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் எங்கு குடிநீர் பிரச்னை இருந்தாலும் முதல்வர் கருணாநிதி அரசு உடனடி யாக நடவடிக்கை எடுக்கும். இந்த மேல்நிலை குடிநீர் தொட்டியில் ஒரு வாரத்துக்குள் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். அதுமட்டுமின்றி தரைதளத்தில் இதற்காக தண்ணீர் தொட்டி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமல் இருக்க நாளை (இன்று) சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. என்று அவர் கூறினார். அப்போது புஷ்பராஜ் எம்எல்ஏ, மாவட்ட விற்பனை குழு தலைவர் ராதாமணி, மாவட்ட ஆட்சியர் பழனி சாமி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பழனி சாமி, கோட்டாட்சி யர் வரலட்சுமி, தாசில்தார் பாமா, திமுக ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், வழக்கறிஞர் தங்கம், நகர செய லாளர் செல்வராஜ், சடை யாண்டி, தெய்வசிகா மணி, பேரூராட்சி தலைவர் சுந்தரமூர்த்தி, மஸ்தான், துணைத்தலைவர் வக்கீல் அன்பு, முன்னாள் பேரூராட்சி தலைவர் ஏழுமலை, பிரபு, கவுன்சிலர்கள், குணா, கோவிந்து, மொபின்கான், ஒன்றிய துணை செயலாளர்கள் சங்கர், லெனின்தாஸ், முருகதாஸ், சரவணகாசன், குணசேகரன், இளைஞரணி அமைப்பாளர் நாயகம், ஜெயராமன், ராஜ்மோகன், வருவாய் அய்வாளர் கண் ணன், விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 31 August 2010 09:32