தினமலர் 02.09.2010
தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஜெனரேட்டர்
பாபநாசம்: பாபநாசம் டவுன் பஞ்சாயத்து பகுதிக்கு குடிநீர் வடசருக்கை அருகே கொள்ளிட கரையில் இருந்து குடிநீர் பைப் மூலம் கொண்டு வரப்பட்டு சப்ளை செய்யப்படுகிறது. கொள்ளிடக் கரை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டு வந்தது. இதை போக்கும் வகையில் புதிய ஜெனரேட்டர் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதன்படி 8.55 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட புதிய ஜெனரேட்டரை பாபநாசம் டவுன் பஞ்சாயத்து தலைவர் சேக்தாவூது துவக்கி வைத்தார். துணைத்தலைவர் கதிரேசன் மற்றும் பலர் பங்கேற்றனர்