தினமணி 02.09.2010
1 கோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி
புதுச்சேரி, செப்.1: புதுச்சேரி உழவர்கரை நகராட்சி, ஆலங்குப்பம் கிராமத்தில் 1 கோடி செலவில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
ஆலங்குப்பம் அன்னை நகர் பகுதியில் சமீப காலமாக குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. இதை போக்கும் வகையில் 1 கோடி அளவிலான மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ஆதிதிராவிடர் நல நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டது.
இப்பணிகளை நிறைவேற்றும் பொருட்டு, முதல்கட்டமாக 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் அவ்வளாகத்தை சுற்றி பாதுகாப்பு சுவர் கட்டுதல் ஆகிய பணிகள் மேற்கொள்ள திங்கள்கிழமை பூமிபூஜை நடந்தது.
இந் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஷாஜகான் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். ஆலங்குப்பம் கவுன்சிலர் பி.சுசீலா, பொதுப்பணித்துறை சுகாதார கோட்ட செயற்பொறியாளர் ஜெ.ஜெயக்குமார், கிராம குடிநீர் திட்ட உதவியாளர் சி.சதாசிவம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.