தினமணி 03.09.2010
நெல்லை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
திருநெல்வேலி, செப். 2: திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடிநீர் கட்டணம் உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாளையங்கோட்டை மண்டல தலைவர் சுப. சீதாராமன் வியாழக்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும் என்ற தீர்மானம் ஆகஸ்ட் 19-ம் தேதி நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில்ஒத்திவைக்கப்பட்டது.
மேலும் வீடுகட்ட பிலான் கொடுப்பவர்கள் வீட்டு பிளானோடு பசுமைக் கட்டணம் (மரம் வளர்க்க) ரூ.2000 செலுத்த வேண்டும் என்ற தீர்மானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் இருந்து அதிகாரப் பூர்வமான நோட்டீஸ் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் வரை பொதுமக்கள் ஏற்கெனவே செலுத்தி வரும் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதோடு புதிய வீடுகட்ட பிளான் கொடுப்பவர்கள் பசுமை வரி செலுத்த வேண்டாம். மேலும் பாதாளச் சாக்கடை இணைப்பு பெறாதவர்கள் சேவைக் கட்டணத்தை இணைப்பு பெற்ற பிறகு செலுத்தினால் போதும் என தெரிவித்துள்ளார்.