Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தேவதானப்பட்டிக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிய திட்டம்

Print PDF

தினமலர் 06.09.2010

தேவதானப்பட்டிக்கு குடிநீர் சப்ளை செய்ய புதிய திட்டம்

தேவதானப்பட்டி : தேவதானப்பட்டியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்த ஆய்வுப்பணிகள் தொடங்கி உள்ளன என செயல் அலுவலர் பாபுஜி தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: தேவதானப்பட்டி பேரூராட்சியில் மஞ்சளார், காமக்காபட்டி, சாத்தாகோயில்பட்டி, பெருமாள்கோயில் பட்டி, புல்லக்காபட்டி, அட்டணம் பட்டி ஆகிய கிராமங்கள் உள் ளன. மஞ்சளார், காமக்காபட்டி தவிர மற்ற கிராமங்களுக்கு மஞ்சளாற்றில் வரும் நீரை, காமாட்சி அம்மன் கோயில் அருகில் நீரேற்று நிலையம் அமைத்து சுத்தம் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.

நாளுக்கு நாள் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தற்போதைய குடிநீர் திட்டம் மூலம் பொதுமக்களின் குடிநீர் தேவைகளை சரி செய்ய முடியவில்லை. மேடான பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை சீராக கிடைக்கவில்லை.

எனவே மஞ்சளாற்று பகுதியில் புதிய உறை கிணறு அமைத்து, புதிய இரண்டு மேல்நிலைத் தொட்டிகள் கட்டி குடிநீர் சப்ளை செய்ய குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது. பணிகள் முடிந்ததும் அரசு ஒப்புதல் பெற்று செயல்படுத்தப்படும் என்றார்.