தினமலர் 22.09.2010
அண்ணாமலை நகர் பேரூராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க முடிவு
சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலைநகரில் குடிநீர் பற்றாக் குறையை போக்க ஆழ்துளை கிணறுகளுக்கு இணைப்பு வழங்குவது என பேரூராட்சிக் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சேர்மன் கீதா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் ரங்கநாதன் முன் னிலை வகித்தார். துணைத் தலைவர் பாண் டியன் உள்ளிட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட் டத்தில் 13வது நிதிக்குழு மானிய திட்டத்தில் பணிகள் தேர்வு செய்யப் பட்டது.
பேரூராட்சிக்குப்பட்ட காலனி பகுதியில் குடிநீர் ஆழ்துளை கிணறு அமைப்பது, குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறுகளுக்கு இணைப்பு வழங்குவது. துப்புரவு பணியாளர்களுக்கு மழைக்கோட்டு, காலணிகள் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.