Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குந்தா பகுதியில் ரூ20லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் ஊட்டி எம்.எல்.ஏ.தகவல்

Print PDF

தினகரன் 23.09.2010

குந்தா பகுதியில் ரூ20லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் ஊட்டி எம்.எல்..தகவல்

மஞ்சூர்,செப்.23: குந்தா அருகே ரூ.20 லட்சத்தில் புதிய குடிநீர் திட்டம் நிறைவேற்றப்படும் என ஊட்டி எம்.எல்..கூறினார்.

மஞ்சூர் அருகே உள்ள ஓனிக்கட்டி, அண்ணாநகர் கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கீழ்குந்தா பேரூராட்சிக்குட்பட்ட இந்த பகுதியில் திருமணம், திருவிழா உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகளை நடத்த மண்டப வசதி இல்லாததால் சமுதாய கூடம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் இதுகுறித்து ஊட்டி எம்.எல்..கோபாலிடம் மனு கொடுத்திருந்தனர்.இதைத்தொடர்ந்து கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அண்ணாநகரில் சமுதாய கூடம் கட்ட ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து சமுதாய கூடம் கட்டுவதற்காக பூமி பூஜை நேற்று நடந்தது. விழாவுக்கு கிராம தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கீழ்குந்தா பேரூராட்சி செயல் அலுவலகர் ஜெயராமன்,துணைத்தலைவர் பாபு, குந்தா வட்டார காங்கிரஸ் தலைலர் கோபாலன், கவுன்சிலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊர் கமிட்டி செயலாளர் மணியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக எம்.எல்..கோபாலன் கலந்து கொண்டு சமுதாய கூடத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். அவர் பேசியதாவது:

சட்டமன்ற உறப்பினர்தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரை 14 சமுதாய கூடங்கள் கட்டப்பட்டுள்ளன. புறக்கணிக்கப்பட்ட மற்றும் அடிப்படை வசதிகள் இல்லா பகுதிகளுக்கு முன்னுரிமை கொடுத்து வளர்ச்சித்திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த மாதம் அதிகரட்டி பேரூராட்சியில் ரூ.88 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டப்பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதேபோல் ஓனிக்கட்டி பகுதியில் உள்ள குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்டம், சுற்றுலா வளர்ச்சி ஆகியவை மூலம் ரூ.20 லட்சத்தில் 6 மாதத்தில் பணி மேற்கொள்ளப்படும்.

கடந்த காலங்களில் கிராமப்புறங்களில் புதிய ரேஷன்கடைகளை திறக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 200 குடும்ப அட்டைகள் இருந்தாலே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் ரேஷன் கடை திறக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி ஓனிக்கட்டி சுற்றுவட்டார பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று ஓனிக்கட்டியில் ரேஷன் கடை அமைக்க கூட்டுறவு துறைக்கு பரிந்துரை செய்யப்படும். அண்ணாநகர் பகுதியில் மண்சரிவு அபாயம் உள்ளதை கருத்தில் கொண்டு குடியிருப்புகளில் தடுப்பு சுவர் அமைக்க கலெக்டர் மற்றும் மலைப்பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குனரிடம் கோரிக்கை வைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் காங்கிஸ் கமிட்டி ஓ.பி.சி.பிரிவு £நில தலைவர் பீமன், குந்தா வட்டார எஸ்.டி,, எஸ்.சி.பிரிவு தலலவர் கன்னையன், கிராம கமிட்டி பொருளாளர் மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஓனிக்கண்டி பஜாரில் காங்கிரஸ் கிராம கமிட்டி தலைவர் சத்தியசீலன் தலைமையில் எம்.எல்..கோபாலன் காங்கிரஸ் கொடியேற்றினார், முடிவில் கவுன்சிலர் குமார் நன்றி கூறினர்.