தினகரன் 05.10.2010
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளை எம்.பி., ஆய்வுபென்னாகரம்
, அக்.5: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் கனவாக உள்ளது. ரூ.1900 கோடி மதிப்பீட்டில் ஒகேனக்கல் காவிரியாற்றில் இருந்து குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக பணிகள் வேகமாக நடந்து வருகிறது.ஒகேனக்கல்
, சத்திரம் பகுதி, ஒகேனக்கல்& தர்மபுரி செல்லும் பாதையில் முண்டச்சிபள்ளம், பென்னாகரம் அருகே மடம் கிராம பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்திட்டப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பென்னாகரம் அருகே மடம் பகுதியில்
2640 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதேபோன்று ஒகேனக்கல்லில் இருந்து பென்னாகரம் செல்லும் சாலையில், வனப்பகுதியான முண்டச்சிபள்ளம் அருகில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், குடிநீர் திட்டப்பணிகளுக்கு ஒகேனக்கல்லில் இருந்து ரட்சத குழாய்கள் அமைக்கும் பணியும் தற்போது நடந்து வருகிறது. இப்பணிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் மேற்பார்வையிட்டார்.அப்போது பென்னாகரம் நகர திமுக செயலாளர் தமிழ்செல்வன்
, முன்னாள் ஒன்றிய செயலாளர் காளியப்பன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் அண்ணாதுரை, திமுக நிர்வாகிகள் தர்மச்செல்வன், மல்லமுத்து, வைத்தியலிங்கம், பாளைஅன்பு, பாலமுருகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.ஒகேனக்கல்லில் இருந்து பென்னகாரம் செல்லும் சாலையில் உள்ள வனப்பகுதி முண்டச்சிபள்ளம் பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டப்பணிகளுக்காக ரட்சத குழாய் பதிக்கும் பணிகள் நடந்து வருகிறது
. இப்பணிகளை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் தாமரைச்செல்வன் பார்வையிட்டார். அருகில் திமுக நிர்வாகிகள் உள்ளனர்.