Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருவில்லிபுத்து£ர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Print PDF

தினகரன் 06.10.2010

திருவில்லிபுத்து£ர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

திருவில்லிபுத்தூர், அக்.6: திருவில்லிபுத்தூர் நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி ஆணையர் முத்துக்கண்ணு அறிக்கை: திருவில்லிபுத்தூர் நகராட்சியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் நிறைவேறும் தருவாயில் உள்ளது. எனவே, திருவில்லிபுத்தூர் நகர்பகுதியில் உள்ள வீடுகள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுப்பதற்கு விண்ணப்ப படிவங்கள் நகராட்சியில் வருகிற 7ம் தேதி முதல் விநியோகிக்கப்படுகிறது.

எனவே புதிய குடிநீர் இணைப்பு பெறுவதற்கு கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் அனைவருக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். வீட்டு உபயோக கட்டிடங்களுக்கு முன்வைப்பு தொகையாக 5ஆயிரம், வணிக உபயோக கட்டிடங்களுக்கு 10ஆயிரம், தொழிற்சாலை உபயோக கட்டிடங்களுக்கு 15ஆயிரம் செலுத்த வேண்டும்.

வைப்பு தொகையுடன் விண்ணப்ப பதிவு கட்டணம் 100ஐ செலுத்தி நகராட்சியில் முன்னுரிமையினை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.