Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஸ்ரீவிலி.யில் புதிய குடிநீர் இணைப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

Print PDF

தினமணி 06.10.2010

ஸ்ரீவிலி.யில் புதிய குடிநீர் இணைப்பு: நாளை முதல் விண்ணப்பம் விநியோகம்

ஸ்ரீவில்லிபுத்தூர்,​​ அக்.​ 5:​ ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் புதிய குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதால்,​​ பொதுமக்கள் 7-ம் தேதி முதல் விண்ணப்பம் பெற்று முன் வைப்புத் தொகை கட்டி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

​ ​ இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி ஆணையர் க.முத்துக்கண்ணு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

​ ​ ஸ்ரீவில்லிபுத்தூர் நகருக்கான தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் நிறைவேறும் நிலையில் உள்ளது.​ எனவே பொதுமக்களுக்குப் புதிய குடிநீர் இணைப்பு வழங்கும் வகையில் நகராட்சி அலுவலகத்தில் முன்பதிவு 7-ம் தேதி ​(வியாழக்கிழமை)​ முதல் நடைபெறுகிறது.

​ ​ விண்ணப்பக் கட்டணம் ரூ. 100.​ முன்வைப்புத் தொகை வீட்டு உபயோகத்திற்கு ரூ. 5,000,​ வணிக உபயோகத்திற்கு ரூ. 10,000,​ தொழிற்சாலைகளுக்கு ரூ. 15,000.​ பொதுமக்கள் விண்ணப்பத்துடன்,​​ முன்வைப்புத் தொகையை செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். ​ ​ இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.