Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கன்னியாகுமரியில் அக்.11 முதல் வீட்டு குடிநீர் இணைப்பு பணிகள் தொடக்கம்

Print PDF

தினகரன் 08.10.2010

கன்னியாகுமரியில் அக்.11 முதல் வீட்டு குடிநீர் இணைப்பு பணிகள் தொடக்கம்

கன்னியாகுமரி, அக்.8: கன்னியாகுமரியில் 20 ஆண்டுகளுக்கு பின்னர் வருகிற 11 ம் தேதி வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக கன்னியாகுமரி பேரூ ராட்சி அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.

கன்னியாகுமரி பேரூராட்சியில் கடந்த 1990ம் ஆண்டு வரை வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டு வந்தன. அதன் பின்னர் குடிநீர் பற்றாக்குறை காரணமாக வீட்டிற்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பாக பொதுமக்களும் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்ததன் பயனாக கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு குடிநீர் இணைப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது.

தொடர்ந்து குடிநீர் இணைப்பு பெற விரும்புவோர் ரூ5 ஆயிரம் வைப்புத்தொகையாக செலுத்தி பெயர் பதிவு செய்துகொள்ளலாம் என்று பேரூராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதையடுத்து ஆயிரத்து 669 பேர் தலா ரூ5 ஆயிரம் வீதம் வைப்புத்தொகை செலுத்தி வீட்டு குடிநீர் இணைப்பு பதிவு செய்தனர். வைப்புத் தொகை செலுத்திய வர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் வைப்புத்தொகை செலுத்தப்பட்ட மூப்பு அடிப்படை யில் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட உள்ளதாக பேரூராட்சி அலுவலர் சுப்பையா தெரிவித்தார்.