Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வழங்கல்

Print PDF

தினமலர் 11.10.2010

குடிநீர் இணைப்புக்கு விண்ணப்பம் வழங்கல்

பல்லடம்: புதிய குடிநீர் இணைப்புக்கான விண்ணப்பம், பல்லடம் நகராட்சியில் வரும் 13ம் தேதி வழங்கப்படுகிறது. புதிய குடிநீர் இணைப்பு கேட்டு, பல்லடம் நகராட்சியில் சில ஆண்டுகளுக்கு முன் 2,500 பேர் விண்ணப்பித்தனர். அவர்களுக்கான விண்ணப்பம் நகராட்சியில் இருந்து தபாலில் அனுப்பி வைக்கப் படுகிறது. புதிதாக இணைப்பு தேவைப்படு வோருக்கு, பல்லடம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் விண்ணப்பம் வரும் 13ம் தேதி வழங்கப்படுகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தை 14ம் தேதி திரும்பப் பெற்று, சீனியாரிட்டி அடிப்படையில் இணைப்பு வழங்க நகராட்சி முடிவு செய்துள்ளது.