Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கிருஷ்ணா தண்ணீர் வருகையால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

Print PDF

மாலை மலர் 12.10.2010

கிருஷ்ணா தண்ணீர் வருகையால் பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

கிருஷ்ணா தண்ணீர் வருகையால்
 
 பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்வு

 சென்னை, அக். 12- ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த வாரம் கிருஷ்ணா தண்ணீர் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஆயிரம் கனஅடி வீதம் திறக்கப்பட்ட தண்ணீர் 8-ந்தேதி மாலை 1,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

இதனால் பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு தமிழக எல்லையில் 478 கனஅடியாக அதிகரித்துள்ளது. பூண்டி ஏரிக்கு வரும் தண்ணீர் அளவு 359 கனஅடியாக உள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3232 மில்லியன் கனஅடி. நேற்று முன்தினம் பூண்டி ஏரியில் 1281 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. கிருஷ்ணா தண்ணீர் வருகையால் அது 1303 மில்லியன் கனஅடியாக அதிகரித்துள்ளது.

பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி இன்று காலை நீர்மட்டம் 27.91 அடியாக அதிகரித்துள்ளது. பூண்டியில் இருந்து புழல் ஏரிக்கு 100 கனஅடிதண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

புழல் ஏரியில் 1235 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு இருக்கிறது. நீர்மட்டம் 9.81 அடியாக உள்ளது. இதன் மொத்த உயரம் 21.20 அடி. மொத்த கொள்ளளவு 3330 மில்லியன் கனஅடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3645 மில்லியன் கனஅடி. இன்றைய இருப்பு 1594 மில்லியன் கனஅடி. ஏரியின் மொத்த நீர்மட்டம் 24 அடி. இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 15.34 அடி.

சோழவரம் ஏரியின் மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கனஅடி. மொத்த உயரம் 17.86 அடி. இன்று காலை தண்ணீர் இருப்பு 411 மில்லியன் கனஅடி. நீர்மட்டம் 10.21 அடி.

வீராணம் ஏரியில் 841 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. இன்றைய நீர்மட்டம் 13 அடி. இதன் மொத்த கொள்ளளவு 1465 மில்லியன் கனஅடி. மொத்த உயரம் 15.60 அடி. இன்று காலை நிலவரப்படி ஏரிக்கு 1200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

சென்னை நகருக்கு தற்போது தினமும் 660 மில்லியன் லிட்டர் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது