Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பம் விநியோகம்

Print PDF

தினமணி 13.10.2010

புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பம் விநியோகம்

பல்லடம், அக். 12: பல்லடத்தில் அத்திக்கடவு குடிநீர் புதிய இணைப்பு பெற விண்ணப்பம் விநியோகம் செய்யப்பட்டது.

பல்லடம் நகராட்சி (முதல் நிலை) பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அத்திகடவு குடிநீர் குழாய் இணைப்பு பெற மக்கள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கு தபால் மூலம் விண்ணப்பங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தவிர குடிநீர் குழாய் இணைப்பு வேண்டுவோர் பல்லடம் நகராட்சி அலுவலகம் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் புதிய குழாய் இணைப்பு பெற விண்ணப்பங்கள் புதன்கிழமை வழங்கப்படும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஆனால் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் நகராட்சி அலுவலகம், பள்ளி வளாகம் கேட் முன்பு மக்கள் விண்ணங்கள் பெற வரிசையில் நின்றனர். இதைத் தொடர்ந்து பல்லடம் நகராட்சி நிர்வாகம் அவர்களுக்கு விண்ணப்பப் படிவங்களை வழங்கியது.

வரி இனங்கள் நிலுவை இன்றி செலுத்தி இருந்தால் மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். குடிநீர் வீட்டு இணைப்பு பெற 7 ஆயிரம், வீட்டுப் பயன்பாடு இல்லாதவை 10 ஆயிரம், தொழிற்சாலைகளுக்கு 15 ஆயிரம் என வைப்புத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இத்தொகையை பல்லடத்தில் உள்ள இந்தியன் வங்கி, கனரா வங்கி, யூனியன் வங்கி ஆகியவற்றில் செலுத்திட விண்ணப்பதார்களுக்கு பல்லடம் நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

குடிநீர் இணைப்பு வேண்டுவோர் அனைவருக்கும் வரிசைப்படி குழாய் இணைப்பு வழங்கப்படும் என்று நகராட்சித் தலைவர் ராமமூர்த்தி, செயல் அலுவலர் பெஞ்சமின் குணாசிங் ஆகியோர் தெரிவித்தனர்.