Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ17கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்

Print PDF

தினகரன் 18.10.2010

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரூ17கோடி நிதி ஒதுக்கீடு அமைச்சர் சுரேஷ்ராஜன் தகவல்

மார்த்தாண்டம், அக். 18: மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டு குடிநீர் திட்டத்திற்கு ரு.17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது என்று குழித்துறை நகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் அமைச்சர் சுரேஷ் ராஜன் பேசினார்.

குழித்துறை நகராட்சி சார்பில் ஞாறாம்விளை நீரேற்று மையத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்புவிழா நடந்தது. விழாவிற்கு டிஆர்ஓ கலைச்செல்வன் தலைமை வகித்தார். நகர்மன்றத் தலைவர் பொன். ஆசைத்தம்பி வரவேற்றார். ஹெலன்டேவிட்சன் எம்பி, ஜாண்ஜோசப் எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது: அனைத்து மக்களும் பயன்படும் வகையில் குழித் துறை நகராட்சி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. நகராட்சியில் 5 வார்டுகளுக்கு சுத்திகரிக் கப்பட்ட குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டபோது கூடுதலாக ரூ. 8 லட்சம் நிதி ஒதுக்கி நகராட்சியில் உள்ள அனைத்து வார்டு(21 வார்டு) மக்களுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்பதில் நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி உறுதியாக இருந்தார். இதை அவர் செயல்படுத்தி காட்டி உள்ளார்.

2006 தேர்தலுக்கு முன்பாகவே இந்த திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டதாக இங்கு பேசிய எம்.எல்.ஏ சுட்டி காட்டினார். அதற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளாக செய்த பணிகளை எண்ணி பார்க்க வேண்டும்.

மெதுகும்மல்&களியக்காவிளை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு ரூ. 17 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் 10 நாட்களில் தொடங்கும். திருவட்டார் கூட்டுகுடிநீர் திட்டத்திற்காக டெண்டர் யாரும் எடுக்க முன்வராததால், அரசு சார்பில் அப்பணிகள் செய்யப்படும். குழித்துறை நகராட்சியில் ரூ. 3 கோடியே 70 லட்சம் செலவில் அமைக்கப்படும் பஸ் நிலைய பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வரும் ஜனவரியில் பணிகள் முடிவடைந்து பஸ்நிலையம் திறக்கப்படும். சாய் சப்சென்டர் அமைக்க 50 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது.

ஆனால் முன்னாள் எம்பிக்கள் சாய் சப்சென்டர் அமைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டதாகவும், நிதி ஒதுக்கப்பட்டதாகவும் கூறி அடிக்கல்லை நாட்டி தேர்தலுக்காக நாடகம் நடத்தியுள்ளனர். நெய்யாறு இடது கரை சானலில் தண்ணீர் திறந்து விட கேரள அரசு பணம் கேட்கிறது. இது பற்றி தமிழக முதல்வர் கேரள அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். ஒரு மாதமாகியும் எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ஜாண்ஜேக்கப் எம்.எல்.., மாவட்ட ஊராட்சித் தலைவர் அஜிதா, வேளாண் மை விற்பனைக்குழுத் தலைவர் ஜி.எம்.ஷா, தமிழ்நாடு மீனவர் நல வாரிய துணைத் தலைவர் பெர்னார்டு, முன்னாள் அமைச்சர் லாரன்ஸ், கவுன்சிலர்கள் சகாதேவன், ஜோசப், நகர்மன்றத் துணைத் தலைவர் யூஜின், குழித்துறை மோட்டார் வாகன தொழிற் சங்கத் தலைவர் மாகின், நகர கமிஷனர் சர்தார், பொறி யாளர் ரமேஷ், விவசாய அணி குமரி தேவராஜ், அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.