தினகரன் 20.10.2010
மாதாபுரத்தில் குடிநீர் தொட்டி திறப்பு
புதுக்கடை, அக்.20: புதுக்கடை அருகே மாதாபுரத்தில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.கிள்ளியூர் பேரூராட்சிக்குட்பட்ட மாதாபுரத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத் தின் கீழ் ரூ5
லட்சம் மதிப்பில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று. அதன் திறப்பு விழா நடைபெற்றது.கிள்ளியூர் எம்.எல்.ஏ. ஜாண்ஜேக்கப் திறந்து வைத்தார். ஹெலன்டேவிட் சன் எம்.பி. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். செயல் அலுவலர் பிராங்கிளின் சிவகுமார், பேரூராட்சி துணை தலைவர் சுரேஷ், முன் னாள் துணை தலைவர் தேவானந்த், பாலபள்ளம் பேரூ ராட்சி கவுன்சிலர் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாதாபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ திறந்து வைத்தார். உடன் ஹெலன்டேவிட்சன் எம்.பி.