தினகரன் 26.10.2010
சிவகாசி நகராட்சி 10 வார்டுகளில் ஆழ்துளை கிணறு அமைக்க முடிவு
சிவகாசி,அக்.26: சிவகாசி நகராட்சியில் உள்ள 10வார்டுகளில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டு ள்ளது. சிவகாசி நகராட்சியில் வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் சுமார் ரூ.5 லட்சம் மதிப் பில் 10வார்டுகளில் ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ராணி அண்ணா காலனி, முஸ்லீம் நடுத்தெரு, பசும்பொன் ரோடு, புதுரோடு, பிகேஎஸ்ஏ ஆறு முகம் ரோடு, காரனேசன் காலனி, பட்டிதெரு, பராசக்தி காலனி, பாரதிநகர் ஆகிய இடங்களில் இந்த ஆழத்துளை கிணறுகள் அமைய உள்ளன. இந்த பணி கள் விரைவில் துவங்கும் என துணைத்தலைவர் தெரிவித்தார்.