தினகரன் 28.10.2010
கடையநல்லூர் பகுதியில் குடிநீர் திட்டப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு
கடையநல்லு£ர், அக். 28: கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் சுமார் 1 லட்சம் பேர் வசிக்கின்றனர். இங்கு தாமிரபரணி குடிநீர் திட்டம் மூலமும், கருப்பாநதி பெரியாற்று படுகையின் மூலமும் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு சுமார் 40 ஆண்டுகள் ஆவதால் குடிநீர் விநியோக குழாயில் பழுது ஏற்பட்டு பொதுமக்களுக்கு சீரான குடிநீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.
இந்நிலையில் கடையநல் லு£ர் நகராட்சி பகுதியில் ரூ.23 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக நீர்ஆதார பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கருப்பாநதி, கல்லாறு பெரியநாயகிஅம்மன் கோயில் பகுதியில் நகராட்சி நிர்வாக தலைமை பொறியாளர் ரகுநாதன், நகராட்சி மண்டல உதவி செயற்பொறியாளர் கனகராஜ், குடிநீர் வடிகால் வாரிய உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி பொறியாளர் அகமதுஅலி உடன் சென் றனர். கடையநல்லு£ர் நகராட்சி பகுதியில் புதிய குடிநீர் திட்டப் பணிகளை அதிகாரிகள் பார்வையிட்டனர்.