Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னை குடிநீர் வாரியத்தில் விரைவில் குறுந்தகவல் சேவை

Print PDF

தினமணி                28.10.2010

சென்னை குடிநீர் வாரியத்தில் விரைவில் குறுந்தகவல் சேவை

சென்னை, அக்.27: சென்னை குடிநீர் வாரியத்தில் குறுந்தகவல் சேவை உபயோகத்துடன் புகார் கண்காணிப்பு அமைப்பு விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.

இது குறித்து, சென்னை குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் ராஜேஷ் லக்கானி வெளியிட்ட செய்தி:

சென்னை குடிநீர் வாரியம் 2007-ம் ஆண்டு முதல் ஆன்லைன் புகார் பிரிவினை செயல்படுத்தி வருகிறது. இப்போது குறுந்தகவல் சேவையை (எஸ்.எம்.எஸ்.) பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தங்கள் புகார் பற்றிய தகவலை தொலைபேசி மூலமாக பதிவு செய்தவுடன், சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து குறுந்தகவல் சேவை வாயிலாக புகாரினை பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகையையும், அதற்கு உண்டான எண்ணையும் பெற முடியும்.