Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கையிருப்பு அடுத்த ஆண்டு ஜூலை வரை தாங்கும்

Print PDF

தினமலர்                 03.11.2010

குடிநீர் கையிருப்பு அடுத்த ஆண்டு ஜூலை வரை தாங்கும்

சென்னை : ""நகரில் கழிவுநீர் அகற்றும் பிரச்னை தீர்க்க 48 கோடி ரூபாய் மதிப்பில் விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது,'' என குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி கூறினார்.

நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்ற வாரியம் சம்பந்தப்பட்ட பிரச்னைகளை தீர்க்க சென்னை மாநகராட்சி மேயர் சுப்ரமணியன் அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் வார்டு குழு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.இதில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுவாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி, கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியத்தின் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில் வார்டு குழு தலைவர்கள் மற்றும் அனைத்து கட்சித் தலைவர்கள் பேசும்போது, பொதுவாக பலவித குறைபாடுகளையும், செயல்படுத்த வேண்டிய நடைமுறைகளையும் விளக்கிப் பேசினர்.பம்பிங் ஸ்டேஷன்கள் பராமரிக்க தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதை ரத்து செய்து வாரியமே பராமரிக்க வேண்டும்; மூன்று ஷிப்ட் முறையில் வேலை செய்ய வேண்டும். 40 ஆண்டுகளுக்கும் மேல் உள்ள பழைய குடிநீர் குழாய்களை அகற்றிவிட்டு புதிய குடிநீர் குழாய்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கழிவுநீர் அடைப்பை அகற்ற உபயோகப்படுத்தப்படும், "ஜெட்ராட்' கருவிகள் வார்டுக்கு ஒன்று வீதம் வாங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல கோரிக்கைகளை முன்வைத்தனர்.இதற்கு பதில் அளித்து குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக இயக்குனர் ராஜேஷ் லக்கானி கூறியதாவது:தற்போது கழிவுநீர் அடைப்புகளை நீக்க 59 "ஜெட்ராட்' கருவிகள் உள்ளன. மேலும், 17 கருவிகள் வாங்கப்பட உள்ளன. தற்போது ஒரு, "ஷிப்ட்' முறையில் பயன்படுத்தப்படும்"ஜெட்ராட்' கருவிகள், இனி இரண்டு, "ஷிப்ட்' முறையாக உபயோகப்படுத்தப்படும்.கடந்த ஒரு மாதத்தில் நகரில், 250 கிலோ மீட்டர் நீளத்திற்கு கழிவுநீர் கால்வாய்கள் சீர்படுத்தப்பட்டுள்ளன. தேவைப்படும் இடங்களில், "மினி பம்பிங் ஸ்டேஷன்' அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகரில் கழிவுநீர் அகற்றும் பிரச்னையை தீர்க்க விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. 48 கோடி ரூபாய் மதிப்பில், தயாரிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் அரசிடம் அனுமதி பெற்று செயல்படுத்தப்படும். அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை நகருக்கு தேவையான குடிநீர் போதுமானதாக உள்ளது.இவ்வாறு ராஜேஷ் லக்கானி கூறினார்