Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு நகராட்சி தலைவர் தகவல்

Print PDF

தினகரன்                04.11.2010

6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் குடிநீர் குழாய் சீரமைப்பு நகராட்சி தலைவர் தகவல்

பெரம்பலூர், நவ. 4: கவுன்சிலர்களின் கோரிக்கையை ஏற்று 6 வார்டுகளில் ரூ7.80 லட்சத்தில் காவிரி குடிநீர் திட்ட குழாய் சீரமைக்கப்படுமென நகராட்சி தலை வர் இளையராஜா தெரிவித்தார்.

பெரம்பலூர் நகராட்சி அவசர கூட்டம் நேற்று நடந் தது. தலைவர் இளையராஜா தலைமை வகித்தார். துணைத்தலைவர் முகுந்தன், ஆணையர் சுரேந்திர ஷா முன்னிலை வகித்தனர். பெர ம்பலூர் நகராட்சியில் குடி நீர் விநியோகம் சரிவர செய ல்படாத 4, 6, 7, 12, 16வது வார்டு, 20வது வார்டுகளில் கவுன்சிலர்களின் கோரிக் கையை ஏற்று, அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பழைய குடிநீர் பைப்லைனை அகற்றிவிட்டு ரூ7.80 லட்சத்தில் புதிய பைப்லைன் அமைத்து குடிநீர் விநியோகம் செய்வது. 16வது வார்டு பெரியார் சிலையிலிருந்து புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில் ரூ5 லட்சத்தில் புதிய தார்சாலை, சிமென்ட் சாலை அமைப்பது. காமராஜர் வளைவு பகுதியிலிருந்து ஆத்தூர் சாலையிலுள்ள மயானம் வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ரூ8

லட்சத்தில் சென்டர் மீடியம் அமைத்து சோடியம் ஆவிவிளக்கு பொருத்துவது. மாவட்ட திமுக அலுவலகம் தொடங்கி துறைமங்கலம் 3 ரோடு வரை உள்ள நெடுஞ்சாலை பகுதியில் ரூ10 லட்சத்தில் சென்டர் மீடியம் அமைத்து சோடியம் ஆவிவிளக்கு பொருத்துவது உள்ளிட்ட 50 தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

நகராட்சி தலைவர் இளையராஜா பேசும்போது, காமராஜர் வளைவு முதல் சங்குப்பேட்டை வரை. சங்குப்பேட்டை முதல் பாலக் கரை வரை. புதிய பஸ்ஸ்டாண்டு முதல் மாவட்ட திமுக அலுவலகம் வரை என 3 கட்டமாக ரூ45

லட்சத்தில் சென்டர் மீடியா விளக்கு அமைக்கப்பட்டுள்ளன. நிர்வாக அனுமதி கிடைத்தவுடன், புதுபஸ்ஸ்டாண்டு பகுதியிலிருந்து 4 ரோடு வரை அடுத்தகட்டமாக 1 கிலோ மீட்டருக்கு சென்டர்மீடியம் அமைக்கப்படவுள்ளன.

பாதாள சாக்கடை திட்ட பணிகளு க்காக குழாய் அமைக்கும் பணி முடிவடைந்த பகுதிக ளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெறவுள்ளன. உள்ளாட்சித்துறை அமைச்சரால் வழங்கப்பட்ட ரூ3 கோடியில் புதிய தார்சாலை அமைக்கப்பட்டவுடன் நகராட்சியில் தார்சாலை, சிமென்ட் சாலைகள் இல் லாத பகுதியே கிடையாது என்ற நிலை ஏற்படும் என்றார்.

நகராட்சி பொறியாளர் கருணாகரன், கவுன்சிலர் கள் பாரி, அன்புத்துரை, கனகராஜ், கருணாநிதி, ஜெயக்குமார், மாரிக்கண் ணன், ரஹமத்துல்லா, சிவக்குமார், ரமேஷ்பாண்டியன், ராமச்சந்திரன், ராஜேந்தி ரன், சரவணன், ஈஸ்வரி, புவனேஸ்வரி, சுசீலா, தா ண்டாயி, கண்ணகி, பொற் கொடி, பேபிகாமராஜ் கலந்து கொண்டனர்.