Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"ஜல்" புயல் மழை: 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

Print PDF

மாலை மலர்               09.11.2010

"ஜல்" புயல் மழை: 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

“ஜல்” புயல் மழை:
 
 4 ஏரிகளில் நீர்மட்டம் உயர்வு

சென்னை, நவ.8- சென்னையை மிரட்டி வந்த "ஜல்" புயல் நேற்றிரவு கரையை கடந்தபோது பலத்த மழை- சேதம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் வலுவிழந்து கரையை கடந்ததால் அதிக அளவு மழை பெய்யவில்லை. விட்டு விட்டுதான் மழை பெய்தது.

ஆனாலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், செம்பரம் பாக்கம், சோழவரம் ஏரிகளுக்கு கணிசமான நீர் வரத்து வந்தது.

பூண்டி எரிக்கு 47 மி. கனஅடி தண்ணீரும், புழல் ஏரிக்கு 84 மி.கனஅடி தண்ணீரும் வந்துள்ளது.

இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 35 மி.கன அடியும், சோழவரத்துக்கு 7 மி.கனஅடி தண்ணீரும் கிடைத்துள்ளது. 4 ஏரிகளுக்கும் மொத்தம் 173 மி.கனஅடி தண்ணீர் கிடைத்துள்ளதால் ஏரிகளின் நீர்மட்டம் ஓரளவு உயர்ந்துள்ளது.

தற்போது பூண்டி ஏரிக்கு 1007 கனஅடி வீதம் தண்ணீர் வருகிறது. புழல் ஏரிக்கு 1105 கனஅடியும், செம்பரம்பாக்கம் ஏரிக்கு 498 கனஅடியும் சோழவரம் ஏரிக்கு 81 கனஅடி தண்ணீரும், வீராணம் ஏரிக்கு 200 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.