தினமணி 11.11.2010
தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு
29-ம் தேதி அடிக்கல்: மு.க.ஸ்டாலின்சென்னை
, நவ. 10: தாமிரபரணி கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கு வரும் 29-ம் தேதி அடிக்கல் நாட்டப்படும் என்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற கேள்வி நேரத்தின் போது
, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் ராமசாமி எழுப்பிய கேள்விக்கு ஸ்டாலின் அளித்த பதில்:விருதுநகர் மாவட்டம்
, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் வத்திராயிருப்பு ஒன்றியத்தைச் சேர்ந்த அனைத்து குடியிருப்புகளுக்கும் குடிநீர் வழங்கும் வகையில் தாமிரபரணி ஆற்றை நீர் ஆதாரமாகக் கொண்டு 173 கோடி திட்ட மதிப்பீட்டில் கூட்டுக்குடிநீர்த் திட்டம் தயாரிக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இதற்கான அடிக்கல் நாட்டு விழா வரும்
29-ம் தேதி நடைபெறும். இந்தப் பணிகள் முடிவடைகின்ற நேரத்தில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக வத்திராயிருப்பு ஒன்றியத்தில் இருக்கக் கூடிய குடிநீர் பற்றாக்குறை மற்றும் எதிர்கால குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும்.தாமிரபரணி ஆற்றினை நீர் ஆதாரமாகக் கொண்டு முக்கூடல் அருகே நீர் உறிஞ்சும் கிணறுகள் அமைக்கப்படும்
. இதன்வழியாக, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள செய்தூர், செட்டியார்பட்டி, மம்சாபுரம், வத்திராயிருப்பு, சுந்தரபாண்டியபுரம், வ.புதுப்பட்டி, ச.கொடிக்குளம் ஆகிய ஏழு பேரூராட்சிகள், இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு ஒன்றியங்களில் இருக்கக் கூடிய 395 குடியிருப்புகளைச் சேர்ந்த 3 லட்சத்து 84 ஆயிரத்து 315 மக்கள் பயன்பெறுவர்.இந்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தோடு ராஜபாளையம் நகராட்சியை இணைப்பதற்கான கோரிக்கையும் பரிசீலிக்கப்படும் என்றார் துணை முதல்வர் மு
.க.ஸ்டாலின்.