Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொடர் மழை எதிரொலி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Print PDF

தினகரன்                 18.11.2010

தொடர் மழை எதிரொலி சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

சென்னை, நவ.18: வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரிகளில் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

பூண்டி ஏரி:

மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கன அடி. தற்போது 2,246 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கிருஷ்ணா கால்வாய் மூலம் நீர்வரத்து 387 கன அடி. மழைநீர் வரத்து 703 கன அடி. ஏரியில் இருந்து 411 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில் 1,696 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது.

புழல் ஏரி:

மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. ஏரியில் தண்ணீர் இருப்பு 2,103 மில்லியன் கன அடி. மழைநீர் மற்றும் பூண்டி ஏரியில் இருந்து வரத்து 1,175 கன அடி. 133 கன அடி தண்ணீர் குடிநீருக்காக வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இருப்பு 1,729 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரி:

மொத்த கொள்ளளவு 881 மில்லியன் கன அடி. தண்ணீர் இருப்பு 524 மில்லியன் கன அடி. மழைநீர் வரத்து 289 கன அடி. கடந்த ஆண்டு இருப்பு 552 மில்லியன் கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரி:

மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. தற்போது 1,777 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 892 கன அடி. 93 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கடந்த ஆண்டு இருப்பு 1,587 மில்லியன் கன அடி. தொடர் மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால், இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது. விரைவில் நிரம்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது. தொடர் மழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. பூண்டி ஏரி நீர் நிரம்பி காட்சி அளிக்கிறது. இதனால், இந்த ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயருகிறது. விரைவில் நிரம்பும் நிலையும் ஏற்பட்டுள்ளது.