Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு

Print PDF

தினகரன்               23.11.2010

பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில் 10 ஆயிரம் புதிய குடிநீர் இணைப்பு

கோவை, நவ.23:பில்லூர் 2வது குடிநீர் திட்டத்தில், முதல் கட்டமாக 10 ஆயிரம் புதிய இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி சார்பில் 140 கோடி ரூபாய் செலவில் பில்லூர் 2வது குடிநீர் திட்டப்பணி நடக்கிறது. மார்ச் மாத இறுதியில் பணி முடியும். ஏப்ரல் முதல் வாரத்தில் குடிநீர் விநியோகிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது பில்லூர் முதல் குடிநீர் திட்டத்தில் தினமும் 6.5 கோடி லிட்டர் குடிநீர் எடுக்கப்படுகிறது. 2வது திட்டத்திலும் இதே அளவிற்கு குடிநீர் பெற முடியும்.

தற்போது நகரில், சுமார் 2.5 லட்சம் வீடுகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவற்றில், 1.3 லட் சம் வீடுகளுக்கு மட்டும், குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தா ல், முதல் கட்டமாக 10 ஆயிரம் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். குறிப்பாக, சிங்காநல்லூர், சவுரிபாளையம், உப்பிலிபாளையம், வரதராஜபுரம், ஒண்டிப்புதூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு மட்டும் சுமார் 6 ஆயிரம் குடிநீர் இணைப்பு தரப்படும்.

மாநகரில், வரும் 10 ஆண்டுகளில், 1.5 லட்சம் வீடுகளுக்கு புதிதாக குடிநீர் இணைப்பு தர திட்டமிடப்பட்டுள்ளது. வணிக இணை ப்புகளும் தேவையான அளவு வழங்கப்படும். பஸ் ஸ்டா ண்ட், மார்க்கெட், மருத்துவமனை உட்பட பல்வேறு பகுதிகளில் குடி நீரை தடையின்றி வழங்க முடிவு எடுக்கப்பட்டுள் ளது.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், "பில்லூர் 2வது குடிநீர் திட்டம் செயல்பாட்டிற்கு வந்தால், மக்கள் கேட் கும் அளவிற்கு நிலுவையின்றி குடிநீர் இணைப்பு தரமுடியும்.

4 நாளுக்கு ஒரு முறை என்ற நிலை மாறி, தினமும் குடிநீர் வழங்கப்படும். எந்த பகுதியிலும் குடிநீர் தட்டுப்பாடு, பற்றாக்கு றை இருக்காது.

சிங்காநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் விரைவில் பகிர்மான குழாய் அமைக்கப்படும். இதன் மூலம் குடிநீரை தேவை பூர்த்தி செய்யப்படும். மொத்த குடிநீர் அளவு மேலும் 6.5 கோடி லிட்டராக உயரும், " என் றார்.

ஏப்ரல் மாதம் வழங்கப்படும் 2036 வரை பஞ்சமிருக்காது

பில்லூர் 2வது குடிநீர் திட்டம், 2036ம் ஆண்டு வரையுள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுவாணி அணை மூலம் தினமும் 8.3 கோடி லிட்டர், பில்லூர் முதல் திட்டத்தில் 6.5 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கிறது. 2வது திட்டம் நடைமுறைக்கு வந்தால், தினமும் 21.3 கோடி லிட்டர் குடிநீர் கிடைக்கும். நகரில் ஒரு தனிநபருக்கு 135 லிட்டர் குடிநீர் தினமும் வழங்கவேண்டும். ஆனால், புதிய திட்டம் வந்தால் தினமும் தனிநபருக்கு 150 லிட்டர் குடிநீர் கிடைக்கும். 2021ம் ஆண்டு, நகரின் மக்கள் தொகை 12.88 லட்சமாகவும், 2036ம் ஆண்டு 16.44 லட்சமாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 2036ம் ஆண்டு வரை குடிநீர் பற்றாக்குறையின்றி தொடரும். மொத்த குடிநீரில், 10 முதல் 15 சதவீதம் இழப்பு ஏற்படும் என விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.