Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு கமிஷனர் அறிவிப்பு

Print PDF

தினகரன்                  26.11.2010

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இரண்டே நாளில் குடிநீர் இணைப்பு கமிஷனர் அறிவிப்பு

ஊட்டி, நவ. 26: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார் மற்றும் அப்பர் பஜார் பகுதி மக்கள் விண்ணப்பித்த இரு நாட்களில் குடி நீர் இணைப்பு வழங்கப்ப டும் எனநகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு நகரா ட்சி நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்கி வருகிறது.அனுமதி வழங்கியவுடன் சம்பந்தப்பட்ட குடியிருப்புவாசிகள்சாலையின் குறுக்கே குழாயை கொண்டு செல்ல இரவில் யாருக்கும் தெரி யாமல் சாலையை தோண்டி விடுகின்றனர். தோண்டப்பட்ட இடத்தை அப்படியே விட்டு விடுவதால் நாள டைவில் சாலை பழுதடைந்து விடுகிறது.

சாலையில் பெரும் பள் ளம் ஏற்பட்டு வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகிறது.

இதனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் தற்போது ரூ.3 கோடியில் சீரமைக்கப்படவுள்ள சாலை களின் ஓரங்களிலுள்ள குடியிருப்பு வாசிகளுக்கு சாலை அமைக்கும் முன் குடிநீர் குழாய்களுக்கு விண்ணப்பித்தால் சாலை தோண்டப்பட்டு குழாய் அமை த்த பின் சாலை சீரமைப்பு பணி களை தொடர முன் வந்துள்ளது.

ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ராமமூர்த்தி கூறியதாவது:

ஊட்டி நகராட்சிக்குட்பட்ட மெயின் பஜார், அப்பர் பஜார், அணிக்கொரை செல்லும் சாலையில் உள்ள பகுதிகள், தாமஸ் சர்ச் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைமிகவும் பழுதடைந்துள்ளது. இச்சாலைகளை ரூ.3 கோடி மதிப்பில் சீர மைக்க திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடும் பணிகளும் முடியும் தருவாயில் உள் ளது. சாலைகளை சீரமைக்கும் பணி விரைவில் துவக்கப்படவுள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வேண்டுமாயின் உடனடியாக விண்ணப்பிக்கலாம். இப்பகுதிகளில் பல குடியிருப்புக்களுக்கு சாலையின் குறுக்கே குழாய்கொண்டு செல்ல வேண்டிய கட்டா யம் உள்ளதால் சாலை அமைத்த பின்னர் மீண்டும் சாலையை தோண்டி எடுக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே சாலை அமைக்கும் முன் இப்பகுதி மக்கள் குடிநீர் இணைப்பு வேண்டி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த இரு நாட்களில் குழாய்கள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்படும். சாலைகள் அமை த்த பின் குடிநீர் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு சாலையின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பை கருத்தில் கொண்டு 3 ஆண்டுகள் கழித்தே குடிநீர் இணைப்பு வழங்கப்படும்.

எனவே ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தாமஸ் சர்ச், அப்பர் பஜார், லோவர் பஜார், மெயின் பஜார் மற்றும் அணிக்கொரை செல்லும் சாலையோர குடியிருப்புவாசிகள் புதிதாக குடிநீர் இணைப்பு வேண்டுமாயின் உடனடியாக நகரா ட்சி நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்து இணைப்பை பெற்று கொள்ளலாம். இதன் மூலம் இப்பகுதிகளில் சீரமைக்கப்படும் சாலைகளை 3 ஆண்டுகளுக்கு பழுதடையாமல் காக்க முடியும். இவ்வாறு கமிஷனர் ராமமூர்த்தி தெரிவித்தார்.