Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

இன்னும் ஒரு அடி தேவை: பூண்டி ஏரி நிரம்புகிறது கடந்த ஆண்டை விட நீர் இருப்பு அதிகரிப்பு

Print PDF

மாலை மலர்                 26.11.2010

இன்னும் ஒரு அடி தேவை: பூண்டி ஏரி நிரம்புகிறது கடந்த ஆண்டை விட நீர் இருப்பு அதிகரிப்பு

இன்னும் ஒரு அடி தேவை:
 
 பூண்டி ஏரி நிரம்புகிறது
 
 கடந்த ஆண்டை விட
 
 நீர் இருப்பு அதிகரிப்பு

சென்னை, நவ 26- தொடர்ந்து பெய்து வரும் பருவ மழை காரணமாக சென்னை குடிநீர் ஏரிகளுக்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி ஏரியின் மொத்த உயரம் 35 அடி. இன்று காலை நிலவரப்படி 34.1 அடி தண்ணீர் உள்ளது. ஏரி முழுவதும் நிரம்ப இன்னும் ஒரு அடிக்கும் குறைவான அளவே தண்ணீர் தேவை. ஏரிக்கு தற்போது வினாடிக்கு 889 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 3232 மில்லியன் கன அடி இப்போது 2854 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 2033 மில்லியன் கன அடி தண்ணீர்தான் இருந்தது.

புழல் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் 1709 மில்லியன் கன அடி தண்ணீர் இருந்தது. இன்று 2465 மில்லியன் கன அடி உள்ளது. ஏரிக்கு 52 கன அடி தண்ணீர் வருகிறது. இந்த ஏரியின் மொத்த உயரம் 21.20 அடி இன்று காலை நிலவரப்படி நீர் மட்டம் 17.3 அடி. கடந்த ஆண்டு இதே நாளில் நீர் இருப்பு 1709 மில்லியன் கன அடி.

சோழவரம் ஏரியின் மொத்த உயரம் 17.86 அடி. இன்று காலை நீர் மட்டம் 15.15 அடி. தண்ணீர் இருப்பு 685 மில்லியன் கன அடி. இதன் மொத்த கொள்ளவு 881 மில்லியன் கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் இருப்பு 605 மில்லியன் கன அடி. இன்றைய நீர்வரத்து 49 கன அடி.

செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளவு 3645 மில்லியன் கன அடி. இன்றைய இருப்பு 2049 மில்லியன் கன அடி. நீர் வரத்து 13 கன அடி. கடந்த ஆண்டு இதே நாளில் தண்ணீர் இருப்பு 1596 மில்லியன் கன அடி. இந்த ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இன்றைய நீர்மட்டம் 17.61 அடி.

வீராணம் ஏரியில் கடந்த ஆண்டு இதே நாளில் தண்ணீர் இருப்பு 671 மில்லியன் கன அடி. இன்றைய இருப்பு 978 மில்லியன் கன அடி. இன்றைய நீர் வரத்து 600 கன அடி ஏரியின் மொத்த உயரம் 15.60 அடி. நீர் மட்டம் 13.6 அடி.