Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

விருதுநகர்: கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

Print PDF

தினமணி            29.11.2010

விருதுநகர்: கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சிவகாசி, நவ.29: விருதுநகர் மாவட்டத்தில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு துணை முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டினார். விருதுநகர் மாவட்டத்தில் ரூ. 597 கோடி திட்ட மதிப்பில் தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கான அடிக்கல்லை நாட்டினார் துணை முதல்வர் ஸ்டாலின். இன்று சிவகாசிக்கு அருகே உள்ள ஆலங்குளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இன்று இதற்கான அடிக்கல் நாட்டி பேசினார்.

குடிநீர் தட்டுப்பாடு நிலவும் மாவட்டமாக அறியப்பட்ட விருதுநகர் மாவட்டத்தில் குடிநீர் பஞ்சத்தைப் போக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிய பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுக்கும் விதத்தில் முயற்சி எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.