Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பில்லூர் குடிநீர் திட்டம் டிரெஞ்சிங் தொழில்நுட்பத்தில் குழாய் பதிக்க நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்கள் ஒப்புதல்

Print PDF

தினகரன்            01.12.2010

பில்லூர் குடிநீர் திட்டம் டிரெஞ்சிங் தொழில்நுட்பத்தில் குழாய் பதிக்க நிதி ஒதுக்கீடு கவுன்சிலர்கள் ஒப்புதல்

கோவை, டிச. 1: கோவை மாநகராட்சிக்கு குடிநீர் தேவை யை பூர்த்தி செய்ய செயல்படுத்தப்படும் பில்லூர் இரண் டாவது குடிநீர் திட்டத்தில் பல்வேறு இடங்களில் ரயில் பாதை மற்றும் ரோடுகளின் குறுக்கே குழி தோண்டாமல் குழாய்களை உந்துதல் முறை யில் பதிக்க (டிரெஞ்சிங் டெக் னாலஜி) நிதி ஒதுக்கீடு செய்வதற்கு தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.

கோவை மாநகராட்சி மன்றத்தின் சாதாரண கூட் டம் மேயர் வெங்கடாச்சலம் தலைமையில் நடந்தது. இதில் கோவை மாநகராட்சிக்கு குடிநீர் வழங்க செயல்படுத்தப்படும் ரூ113.74 கோடி மதிப்பிலான பில்லூர் குடிநீர் திட்ட பணியில் கட்டன் மலை குகையில் இருந்து ராமகிருஷ்ணாபுரம் மேல் நிலை தொட்டி வரை இரும்பு குழாய் பதிக்கப்படுகிறது. இதில் கோவை&மேட்டுப்பாளையம் ரயில் பாதையில் வீரபாண்டி பிரிவு அருகே 58 மீட்டர் நீளத்திற்கு குடிநீர் குழாயை உந்துதல்(டிரெஞ்ச்லெஸ் டெக்னாலஜி) முறை யில் பதிக்க ரூ99.50 லட்சம் செலவிலான திட்டப்பணிக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.

அதேபோல் கீரணத்தம் அருகே சத்தியமங்கலம்& மைசூர் சாலையில் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரூ.58 லட்சம் மதிப்பில் குழாய் பதிப்பது தொடர்பாக நான்கு தீர்மானங்கள் மன்றத்தின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இதற்கு மாநகராட்சி கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரைம¬ப்பு திட்டத் தில் 14வது வார்டில் காந்திநகர் பகுதியில் ரூ2.35 லட்சம் செலவில் தார் ரோடு, 15வது வார்டில் அண்ணாநகர் குடிசை பகுதியில் ரூ2லட்சம் மதிப்பிலும், 19வது வார்டு அருந்ததியர் வீதியில் ரூ3.15 லட்சம் மதிப்பில் கான்கீரீட் ரோடு, 11வது வார்டில் கமலா மில் குட்டை பகுதியில் ரூ4.50லட்சத்தில் தார் ரோடு புதுப்பித்தல், 14வது வார்டில் காந்திநகர் பகுதியில் ரூ2.43 லட்சத்தில் சிமென்ட் கான் கீரிட் தளம் அமைத்தல் பணி களுக்கு கோரப்பட்ட ஒப்பந்தப்புள்ளியை அனுமதியளி க்க மன்றம் முடிவு செய்தது. மேற்கு மண்டலத்தில் மாநகராட்சிக்கு சொந்தமான வணிக வளாக கடைகளுக்கு வாட கை தொகை 15 சதவீதம் உயர் த்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட வாடகை தொகைக்கும் மன்றம் ஒப்புதல் அளித்தது.