Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூண்டி ஏரியில் மேலும் இரண்டு மதகுகள் திறப்பு

Print PDF

தினமணி              06.12.2010

பூண்டி ஏரியில் மேலும் இரண்டு மதகுகள் திறப்பு

திருவள்ளூர், டிச. 5: பூண்டி ஏரிக்கு நீர்வரத்து அதிகளவில் உள்ளதால் மேலும் இரண்டு மதகுகள் திறக்கப்பட்டு ஆரணி ஆற்றுக்கு நீர் திறந்து விடப்பட்டுள்ளது.

சென்னை குடிநீரின் முக்கிய ஆதாரமாக விளங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் சனிக்கிழமை காலை 34.8 அடியாக உயர்ந்தது. (ஏரியின் மொத்த உயரம் 35 அடி) இதையடுத்து 2 மதகுகள் திறக்கப்பட்டு 1000 கன அடி நீர் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கண்டலேறு அணையில் இருந்து வினாடிக்கு 630 கனஅடி நீரும், மழைநீர் வினாடிக்கு 1130 கனஅடி அளவும் சேர்த்து வினாடிக்கு 1760 கனஅடி நீர்வரத்து இருந்தது.

இதையடுத்து பூண்டி ஏரியில் இருந்து இணைப்புக் கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கனஅடி நீரும், மழலைக் கால்வாய் வழியாக வினாடிக்கு 90 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.

மேலும் பூண்டி ஏரியில் 4 மதகுகள் வழியாக வினாடிக்கு 1440 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதையொட்டி ஆட்டரம்பாக்கம், ஒதப்பை, தாமரைப்பாக்கம் உள்ளிட்ட ஏரிக்கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.