Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் இணைப்பு பெற 5 நாட்கள் அவகாசம்

Print PDF

தினமலர்             09.12.2010

குடிநீர் இணைப்பு பெற 5 நாட்கள் அவகாசம்

திண்டுக்கல்: திண்டுக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறுவதற்கு பொதுமக்கள் விண்ணப்பங்கள் வழங்க 5 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

நகராட்சி தலைவர் நடராஜன், கமிஷனர் லட்சுமி கூறியதாவது: திண்டுக்கல் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் முடிந்துள்ள பகுதிகளில் ரோடு போடும் பணி துவக்கப்பட உள்ளது. இந்த பகுதியில் குடியிருப்போர் பாதாள சாக்கடை இணைப்பு, குடிநீர் இணைப்பு பெறாதவர்கள் தேவை இருப்பின் 5 நாட்களுக்குள் விண்ணப்பித்து உடன் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம். இதற்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.