தினமணி 13.12.2010
கிருஷ்ணகிரி நகராட்சியில் குடிநீர் விநியோகம் பாதிப்பு
கிருஷ்ணகிரி, டிச. 12: கிருஷ்ணகிரிக்கு குடிநீர் கொண்டு செல்லும் குழாய் வெடித்ததால், குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
÷கிருஷ்ணகிரி நகராட்சிக்கு தேவையான குடிநீர், சுண்டேகுப்பம் அருகே பாயும் தென்பெண்ணை ஆற்றில் இருந்து எடுக்கப்படுகிறது. தினமும் 72 ஆயிரம் லிட்டர் குடிநீர் வீதம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
÷சில மாதங்களுக்கு முன்பு சுண்டேகுப்பம் கிராமத்தில் உள்ள கோயிலின் மதில்சுவர், குடிநீர் குழாய்கள் மீது கட்டப்பட்டதாம். இந்நிலையில், குடிநீர் குழாய்களை இணைக்கும் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை குழாய் வெடித்து, சாலையில் குடிநீர் வெள்ளம்போல் பாய்ந்தது.
தகவலறிந்த நகராட்சி ஆணையர் லோகநாதன் மற்றும் ஊழியர்கள் உடைந்த குழாயை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். எனவே, 2 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் இருக்காது என ஆணையர் தெரிவித்தார்.